Click Here to Verify Your Membership
First Post Last Post
Desi சிறந்த சரித்திர தமிழ் காமகதைகள்

தீவிர யோசனையுடன் எழுதிக்கொண்டிருந்த பழுவூரார் தனது கனையாழியின் மேலிருந்த பவழத்தை தனது இடது கை கட்டை விரல் நகத்தினால் நெம்ப அந்த பவழம் திறந்து மறுபுறம் மடிந்து நிற்க அந்த கனையாழில் வில்லும் அம்பும் சிரித்து கொண்டிருந்தது.....

அது முத்திரை மோதிரம்....

அவர் தனது கைவிரல்களை மடக்கி தன் முஷ்டியை அழுத்த அந்த ஓலையில் வில்லும் அம்பும் பதியப்பட்டது....

பழுவூரார் குழப்பத்தில் இருந்த நேரம்.....

இரு மனங்கள் தங்கள் காதலை கண்களில் சொல்லியபடி இருந்தன... அதை பார்த்த ஒரு மனம் ஒரு மனம் மகிழ்ச்சியில் இருந்தது....

விஜயனும் கண்டனும் குழலியின் சிறு வயது குறும்புகளை பற்றி பேசிக்கொண்டிருக்க... குழலியின் முகம் கோபமும் நாணமும் குறுநகையும் மாறி மாறி அவள் முகத்தை சிவக்க வைத்துக் கொண்டிருந்தது....

சிறுவயதில் என்று கூறும் போது அவளுக்கு இப்போது பெரிவளா என தோன்றுகிறது.... ஒரு பெண் பருவமடைந்ததும் அவள் பெரியவளாகிவிடுகிறாள்

குழலி பருவத்திற்கு வந்து சில காலமே ஆகியிருக்கவேண்டுமென்பதை அவள் பருவ மேடுகள் விளக்குகின்றன... அது அவள் வயதினை விட அதிகம் வளர்ந்திருந்தாலும் அவள் முகத்தில் தெரியும் சிறு குழந்தைதனமும் இடை அழகும்... பின்னழகும் சொல்லாமல் சொல்லிய விஷயங்கள் பல....

விஜயனின் கண்கள் அவளை பார்க்கும் போதெல்லாம் அவனையும் அறியாது அவளின் மார்கச்சைகளுக்கே சென்றது....

குழலியின் மனமோ சொல்லவும் முடியாது மெல்லவும் முடியாது தவித்தது.... அவன் கண்கள் அவள் முகத்தையும் பின் தன் பருவ எழிலையும் பார்ப்பது கண்டு இனம் புரியாத மகிழச்சியை அடைந்தாலும்... அருகில் அவள் சகோதரன் இருந்ததால் கூச்சத்துடன் "இப்படியா ஒரு மனிதர் வெறித்துப் பார்ப்பது.... சிறுவர்கள் கிடைக்காத மாங்கனியை ஏக்கத்துடன் பார்ப்பது போல் இப்படி பார்க்கிறாரே இந்த மனிதர்" என்று போலியாக கோபபட்டாள்... அவள் மனதிற்குள் கோபபட்டது பொய் என்று அவள் மனதிற்கும் நன்றாகவே தெரிந்தது....

இருள் சூழ ஆரம்பித்ததால் ஏற்றிய விளக்குகள் வெளியிட்ட வெளிச்சம் அவளின் ஒரு புற அங்களில் பட்டு அவளின் இடை வளைவுகளையும் எழில் வளைவுகளையும் எடுத்துக்காட்டி விஜயனின் மனதில் இவளுடன் களவு வாழ்க்கையாவது இப்போதே வாழ்ந்திட துடித்தது....

Quote

விஜயன் தன் மார்க்கச்சைகளை பார்ப்பதை கண்டு அவன் கற்பனையில் கச்சைகள் இல்லாத உடலை நினைத்து பார்ப்பானோ என்ற எண்ணம் ஏற்பட்டதும் அவள் பெண்மை உணர்ச்சி அவளது கைகளை கொண்டு மறைக்க முயன்றவள் தேவையற்ற பதட்டம் வேண்டாம் என எண்ணினாலோ என்னவோ... இடது கையினால் அவளது வலது இடையை பிடித்தபடி வலது கையால் நகங்களை கடித்தபடி தன் மார்கச்சையில் இருந்து பிதுங்கிய அழகுகளை மறைத்தாள்.........

இதை கவனித்த விஜயனின் முகத்தில் குறுநகையுடன் பார்க்க....

இந்த காட்சிகளை கவனிக்காத... அல்லது கவனிக்க முடியாது தவித்த கண்டன்... அவ்விடத்தை விட்டு செல்லவும் முடியாது தவித்தான்.

தன் தந்தை அழைப்பதாய் பணியாள் வந்து சொன்னதும் இருவரையும் ஒரு முறை ஏற இறங்க பார்த்துவிட்டு "நான் சிறிது நேரத்தில் வந்துவிடுகிறேன்" என்று கூறி சென்றான்.

சிறிது நேரம்தான் உங்களுக்கு கொடுக்கப்படுகிறது... பெரிய செயல்களில் இறங்கிவிடாதீர்கள் என்று அச்சப்பட்டு கூறியிருப்பானோ?

தந்தையிருந்த அறையைக்கு போன கண்டன்... அங்கு பழுவூரார் தீவிர சிந்தனையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டிருந்ததை கண்டு அமைதியாய் நின்றான்.. சிறிது நேரம் கழித்தே கண்டன் வந்ததை கண்ட பழுவூரார்....

"வந்துவிட்டாயா... நீயும் விஜயனும் புறப்பட வேண்டியிருக்கும்...."

"நீங்கள் சில நாட்கள் விஜயனை இங்கு சில நாட்கள் தங்கும்படி கூறினீர்கள்...."

ஆம்... ஆனால் அதைவிட முக்கிய காரணமாய் கிளம்ப சொல்கிறேன்

Quote

எங்கு தந்தையே....

காந்தளூர்

காந்தளூரா

ஆம்... நீங்கள் இருவரும் சிலகாலம் காந்தளூர் சாலையில் இருக்க வேண்டியிருக்கும்....

இனியும் என்ன கற்க வேண்டும்.... தந்தையே...

கண்டா நாம் அனைத்து நாளுமே கற்க வேண்டியவை.... இனி வரும் காலம் என் கணிப்பின்படி சரியாய் இருக்குமானால்... நீயும் விஜயனும் கற்கவேண்டியவை அதிகம்.... கற்றது கை மண் அளவு... கல்லாதது உலகளவு இதை நான் உணர்த்த வேண்டிய அவசியமில்லை என நினைக்கிறேன்...

மேற்கொண்டு பேச முற்பட்ட கண்டன்.... பழுவூரார் பார்வையில் இருந்து இனி பேசுவதற்கு ஒன்றும் இல்லை என்பதறிந்தான்...

எப்போது புறப்பட வேண்டும் தந்தையே...

நாளை மாலை....

சரி நான் ஏற்பாடுகளை கவனிக்கிறேன்....

அதை நான் பார்த்துக் கொள்கிறேன்... உனக்கும் விஜயனுக்கும் தேவையானவற்றை எடுத்துக்கொள்....

நீ செல்லலாம் என்பது போல் தலையசைக்க...

விஜயன் இருந்த அறைக்கு சென்றான்.....

உறவு ஏற்படும் முன்னே பிரியப்போவது தெரியாமல் இரு மனங்கள் அங்கு.....

Quote

கண்டனை பழுவூரார் அழைப்பதாக பணியாள் சொன்னதும் குழலியின் மனம் அய்யோ இவரிடம் என்னை தனியாக விட்டுச் சென்றாள் நான் என்ன செய்வேன் என்றும் இவருடன் தனியாக இருக்க சந்தர்ப்பம் வாய்த்ததே என்றும் இரு புறமும் யோசித்தது.

ஆம் மனித மனம் விசித்திரமானது விரும்புவதை விரும்பாதது போல தனக்குத்தானே ஏமாற்றிக்கொள்கிறது,

விஜயன் கண்டன் அந்த அறையை விட்டு சென்றதும் அவளை பார்க்க தமையன் இருக்கும் போதே வெட்கமில்லாமல் என் உடலை கண்களால் மேய்ந்தவர் இப்போது என்ன செய்ய போகிறாரோ என்று அவள் உடல் பாதம் முதல் உச்சி வரை நாணத்தால் சிவக்க.... அவள் முகம் செஞ்சாந்து பூசியது போல் சிவந்தது.

விஜயன் அவளை விட்டு அறையை சுற்றி நோக்கும்போது அவள் கண்கள் அவனை முழுவதுமாக ரசித்தது. அவள் தன்னை பார்க வேண்டும் என்பதற்காகவே வேறுபக்கம் பார்வையை திருப்பியன் அவள் தன்னை நோக்குகிறாள் என்றதும் அவன் முகத்தில் குறுநகை பரவியது.

அந்த அறையின் மெளனத்தினை களைப்பதுபோல் கெளலி(பல்லி) ஒன்று தன் இணைக்கு குரல் கொடுக்க.....

இருவருமே ஒலி வந்த திசை நோக்கிவிட்டு ஒருவரை ஒருவர் நேருக்கு நேராக பார்க்க....

விஜயன் பல்லி.......

அவளும் ஆமாம்.....

பாவம் அவளுக்குத் தெரியாத ஒன்றை கூறுவது போல் விஜயன் கூற... எவ்வளவு சிறந்த வீரனும் பெண்ணை கண்டவுடன் முட்டாளாகி போகிறான். இது முட்டாள்தனமல்ல காதலின் அடித்தளம் என்பதை அவ்விருவருமே அறிவர்,

விஜயன் பல்லிக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்?

குழலி என்ன... பல்லிக்கு நன்றி சொல்ல வேண்டுமா?

ஆம் உன்னை பேச வைத்ததிற்காக... உன்னை மீண்டும் மனுசியாக மாற்றியதற்காக

அவள் குழம்பி என்ன?

இல்லை இயற்கை உன்னை சிலையாக்கிவிட்டதோ என்றென்னினேன்

Quote

நான் ஒன்றும் சிலையல்ல....... என்றாள் சீற்றமாக

சிலை போல் அழகுடன் இருக்கும் நீ சிலையல்ல என்பதால் எனக்குத்தான் மகிழ்ச்சி

ஒரு நொடியில் மீண்டும் நாணப்பட்டு மகிழ்ச்சியா....

ம்...

ஒரு சில நொடிகள் மீண்டும் மெளனம்....

தங்களது காயம்.....? இப்போது எப்படி இருக்கிறது?

ஏதோ கேட்க வேண்டும் என்று கேட்டாளா இல்லை அவன் சிரமப்படுகிறானா என்பதை தெரிந்துகொள்ள கேட்டாளா

வேல்கள் துளைத்த காயம் அல்லவா.........? அதற்குத்தான் சிறிது அஞ்சனம் தடவ வேண்டும்

அய்யோ வேல்களால் ஏற்பட்ட காயமா.... எங்கே என்று அவள் விஜயனின் அருகில் வந்து காயங்களை ஆராயும் நோக்கோடு அவனை நெருங்க... விஜயன் தன் வலக்கையாகல் அவள் இடையை சுற்றி தன்னை நெருக்க... அவள் பூவுடல் மெல்ல நடுங்க ஆரம்பித்தது....

வேலினால் காயம் என்று கூறினீர்களே

ஆம்... அம்பினால் ஏற்பட்ட காயம்

இப்போதுதானே வேலினால் ஏற்பட்ட காயம் என்று கூறினீர்கள்.... சோழர்கள் பெரும் பொய்யர்கள் போலிருக்கிறது....

நான் பொய் ஒன்றும் கூறவில்லை....

வேலில் இருந்து வந்த அம்பினால் காயப்பட்டுள்ளேன்

வேலில் இருந்து வந்த அம்பா.....? வில்லவன் ஏதேனும் விசித்திர பொறி கொண்டு தாக்கிவிட்டானோ என நினைத்து... காயத்தை காட்டுங்கள்.....

அவளது இடையை இறுக்கி தன்னுடன் அணைத்து வேல்விழியாளிடம் இருந்து வந்த மாரன் கணைகளால் பட்ட காயத்தை எப்படி இதயத்தை திறந்து காட்டுவேன்.... நான் ராம தூதன் அல்லவே...

தாங்கள் பொய்யர்தான்...ஒரு சிறுபெண்ணின் மனதை கொள்ளையிட வந்த கள்வர்....

சிறு பெண்ணா.... எனக்கூறி அவளின் மார்கச்சைகளை பார்த்து............
பார்த்தால் சிறு பெண்ணாக தெரியவில்லையே............

நீங்கள் எப்போது பார்த்தீர்கள்.... என்று அவசரப்பட்டு கூறிவிட்டு நாக்கை கடித்துக்கொண்டாள். குழலியின் முகம் வெட்கத்தால் மேலும் சிவக்க....

இருவரும் இவ்வாறு காதல் மொழி பேசி கையோடு கை கோர்த்து நிற்க... குழலியின் சங்கடம் தவிர்க்க வந்தவன் போல்....

அந்த அறைக்குள் கண்டன் நுழைந்தான்... வந்தவன் நிலை மிகவும் தர்மசங்கடமாக இருந்தது... என்னவென்று சொல்வான்... தங்கை இப்படி மாறிப்போவாள் என்பதை கனவிலும் நினைத்தானில்லை...

இருவரும் கண்டனை கவனிக்காது கண்களால் பேசிக்கொண்டிருக்க... வேறுவழியில்லாது ஒரு செருமல் விட இருவரும் சுயநிலைக்கு வந்து தலைகுனிந்து நிற்க.... குழலி தலைகுனிந்தபடி அந்த அறையை விட்டு ஒடினாள்... விஜயன் என்ன பேசுவது என்று தெரியாது தத்தளித்தான்...

Quote

விஜயா நாம் நாளை காந்தளூர் கிளம்ப வேண்டும்....

காந்தளூரா எதற்கு?

அங்கு சமீபகாலமாக புதிதாய் ஒரு சாலை ஏற்படுத்தப்பட்டுள்ளது... அனைத்து கலைகளும் வேத தாந்ரீக முறையில் கற்பிக்கபடுகின்றன... தந்தை கிளம்ப சொல்லியிருக்கிறார்....

கண்டன் இருந்த நிலைமையில் எதையும் விரிவாக சொல்ல விரும்பவில்லை... விரிவாக கேட்கும் நிலையில் விஜயனும் இல்லை...

ஆனால் நமக்கு காந்தளூர் பற்றி அறிவது முக்கியம்.... காந்தளூர் இன்றைய விழிஞம்தான் முன்பு காந்தளூர் அங்கு இருந்த சாலை என்பது கல்வி கற்கும் இடம் பல்லவர் கால கடிகைகளும் சாலைகளும் கற்றுக்கொடுக்கும் இடங்களாக இருந்தாலும்... காந்தளூரில் ஏற்படுத்தப்பட்டிருந்த அந்த சாலைக்கு சில விசேசங்கள் இருந்தது.... அங்கு வீரர்கள் உருவாக்கப்பட்டார்கள்... இது பின்னர் சோழ சாம்ராஜ்யத்திற்கு விரோதமாக இருக்க ராஜராஜன் படையெடுத்து அழித்தார்....

விஜயன் "எப்போது கிளம்ப போகிறாய்?"

என்னது எப்போது கிளம்ப போகிறாயா? நீ வரவில்லையா?

நான் வர விரும்பவில்லை?

ஏன் விஜயா.... கற்றுக்கொள்ள உனக்கு விருப்பமில்லையா என்று கேட்டபடி உள்ளே வந்தார் பழுவூரார்...

விஜயனின் எண்ணம் தெரியாத நிலையில் ஓர் முடிவெடுத்துள்ளோம்.... அவன் ஒத்துக்கொள்வானா என்ற சந்தேகம் இருந்ததால் மகனை முன்னே அனுப்பிய பழுவூரார் பின்னர் உடனே வந்து சேர்ந்தார்..

இல்லை இப்போது இருக்கும் சூழலில் கல்வி கற்க.......?

விஜயா... சரியான நேரத்தில் தவறாக முடிவெடுத்தால் உன் லட்சியம் கனவாகிவிடும்... உன் தந்தை பெருவீரன் இருவருக்கும் நெருங்கிய பழக்கம் இல்லாவிட்டாலும் உன் தந்தையின் ஆற்றல் அறிந்தவன்.... அவசரக்காரன் இள வயதில் உன்னை தவிக்க விட்டுவிட்டு சென்றுவிட்டான்.... அவனை போல் உன் கனவும் கானல் நீராகிவிடக்கூடாது.... இன்றைய அடித்தளம் நாளைய கனவிற்கானது என்பதை மறந்துவிடாதே....

விற்போர்...மற்போர்... இவை என் சிறுவயதில் இருந்து கற்றுக்கொள்வதுதானே புதிதாக என்ன இருக்கிறது என்று விஜயன் கேட்க...

நீ உடல் பலத்தை மட்டுமே யோசிக்கிறாய் விஜயா... உனக்கு மனோபலத்தை அதிகரிக்கவும்... சரியான நேரத்தில் சரியான முடிவு எடுக்கவும் இது தேவை....

அப்படி என்றாலும் காந்தளூர் வரை செல்வானேன்? இங்கு இல்லாத சிறப்பு என்ன இருக்கிறது....

Quote

விஜயா காந்தளூர் சாலை ஆரம்பிக்கப்பட்டு சில வருடங்கள் மட்டுமே ஆகிறது... பொதுவாக வெளியாட்களுக்கு கற்றுக்கொடுப்பதில்லை அங்கு களரி, வாள்வீச்சு, விற்போர்முறையும், இவை அனைத்தும் கற்றுக்கொடுக்கப்படுகிறது அது வேதாகம முறையில் இது வரை வெறும் சூத்திரங்கள் என்று எண்ணப்பட்டவை பற்றி விரிவான போர் முறையும் கற்றுக் கொடுக்கப்படுகிறது....... எனக்கு இருக்கும் தனிப்பட்ட செல்வாக்கை பயன்படுத்தி உன்னை அங்கு கற்க அனுப்புகிறேன்....

எவ்வளவு நாட்கள் கற்க வேண்டியிருக்கும்?

உனக்கு பக்குவம் ஏற்படும் வரை.....

எவ்வளவு நாட்கள் தேவைப்படும் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்.... விஜயன் எப்படியாவது தவிர்க்க நினைத்தான்.... ஆனால் பழுவூரார் சொன்ன விசயங்கள் அவன் ஆர்வத்தை தூண்டினாலும், குழலியை நினைத்து தவிர்க்க நினைத்தான்...

விஜயா இந்த பருவ வயதில் நீ எடுக்கும் முடிவே உன் வாழக்கையை திசை திருப்ப கூடியது... இதில் தவறான முடிவெடுத்தால் விளைவுகளை நினைத்து வருந்த வேண்டியிருக்கலாம்....

காந்தளூர் செல்வது சரியான முடிவு என்கிறீர்களா?

சரியான முடிவெடுக்க கற்றுக்கொள்ள சரியான இடம் காந்தளூர் என்கிறேன்.

வேறுவழியில்லை.... காந்தளூர் சென்றுவிட்டு ஓரிரு மாதங்களில் திரும்பிவிடவேண்டும் என்று மனதில் நினைத்து சரி என்றான் விஜயன்.

எப்பொழுது புறப்படவேண்டும்?

எப்பொழுது என்பதை விட எப்படி என்பது இன்னும் பொருத்தமானதாக இருக்க முடியும் விஜயா?

எப்படியா?

ஆம்... முதலில் உன்னை சராசரியாக மாற்றிக்கொள்... ஒரு சாதாரண வீரனாக.... நாளை மதுரைக்கு கிளம்பும் வாணியச்செட்டியின் வண்டிகளுக்கு காவல் காக்கும் பொறுப்பு கண்டனுக்கு அவன் கீழ் நீ ஒரு வீரன்...

தந்தையே............? கண்டன் வினவ

ஓடம் ஒரு நாள் வண்டியில் ஏறும்.... வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏற வேண்டிவரும் கண்டா என்றார் பழுவூரார்,

எதற்காக இந்த வேடம் பழுவூராரே?

விஜயா ஒரு வீடு எழுப்புவது என்றால் முதலில் மனை இருக்கும் இடத்தையும், மனை அமைய போகும் இடத்தில் இருக்கும் சூழலையும், மண்ணின் சுவையும் அஸ்திவாரம் தோண்டும்போது கிடைக்கும் பொருட்கள் வரை என்ன தேவை என்பதை நமது சாஸ்திரங்கள் கூறுகிறது, அதே போல் நீ சாரசரி வீரர்களையும் அவர்களுக்கு உன் மீது பக்தியையும் நம்பிக்கையையும் வளர்க்க அவர்கள் வாழும் சூழலுக்கு உன்னை அனுப்புகிறேன். மேலும் பாண்டிய பேரரசு அவர்கள் அனுமதியில்லாமல் அவர்களுடைய நாட்டில் நுழைந்து அவர்கள் கோட்டைகளையும் நகரங்களையும் பார்க்க வேண்டும் என்றால் இதுதான் வழி

எதற்கு மதுரை செல்ல வேண்டும்- என்று விஜயன் கேட்க

மதுரையின் சிறப்பை வெறும் வார்த்தைகள் மட்டுமே விளக்கிவிடாது விஜயா,,,, அதனால் நீ ஒருமுறை நேரே சென்று பார்,

விஜயா முதலில் கேள்விகள் கேட்பதை விட அதற்கான பதில்களை நீயே கண்டுபிடிக்க கற்றுக்கொள், பல கேள்விகள் கேட்டு ஒரு பதிலை பெறுவதற்கு பதிலாக பல பதில்களை தரும்படி உனது கேள்வி அமைய வேண்டும்,

மறுநாள் காலை எழுந்தவுடன் அவனது ஸ்னானத்திற்கு தேவையான ஏற்பாடுகள் எல்லாம் சிறப்பாக செயப்பட்டிருந்தது.... முழுமையாக நீராடி முடித்த பின்னர் காலை உணவு அவனது அறைக்கு வந்து சேர்ந்தது... ஆனால் குழலி மட்டும் வரவில்லை

Quote

கண்டனிடம் கேட்கலாம் என்றால் நேற்று அவர்கள் இருவரையும் கண்டன் அந்த நிலைமையில் பார்திருந்ததால் கண்டனிடம் குழலியை பற்றி எப்படி கேட்பது என்று தவிர்த்தான் விஜயன்

நேரம் உச்சியை கடந்தது... ஆனால் குழலி மட்டும் தட்டுப்படவே இல்லை...

நேரம் கடக்க கடக்க செல்வதற்கு முன்பாக ஒரு முறையாவது பார்த்துவிட மாட்டோமா என்று தவிப்பு அதிகமானது....

வேறுவழியின்றி கண்டனிடம் குழலியை பார்க்க முடியவில்லையே என்று விஜயன் கேட்க

கண்டன் விஜயனின் கண்களை நோக்க.... இல்லை காலையில் இருந்து பார்க்க முடியவில்லையே என்று கேட்டேன் என்று விஜயன் உளற

அவள் நாம் கிளம்புகிறோம் என்று கேள்விப்பட்டவுன் காலையில் கோவிலுக்குச் சென்றவள் இன்னும் வரவில்லை.... எதோ பெரிய வேண்டுதல் போல் இருக்கிறது.....

நமது காரியம் வெற்றிகரமாக முடியவேண்டும் என்றும் நானும் பழுவூர் இறைவனை வேண்டிக்கொள்ள வேண்டும்... இறைவனை தரிசித்துவிட்டு வருகிறேன் என்று கூறிவிட்டு கண்டன் பதில் கூறும் முன் வெளியேறினான் விஜயன்

இறைவனை தரிசிக்க வேண்டும் என்று அவன் கூறிய பொய்யை உணர்ந்தாலும்... உண்மையாக இருக்க வேண்டும் என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டான் கண்டன்.

சிறுதொலைவும் பெரும்தொலைவாக தெரிந்தது விஜயனுக்கு... ஒரு வழியாக ஊரின் மையத்தில் இருந்த கோவிலுக்கு சென்றபோது அது அவன் எதிர்பார்த்தபடி கற்றளியாக இருந்தது.... அவன் கண்களுக்கு இறைவன் தெரியவில்லை... கற்றளி தெரியவில்லை... சிற்பங்கள் தெரியவில்லை.. மனமுருகி வேண்டுதலும் வருத்தமும் நிறைந்த முகத்துடன் இருந்த குழலி மட்டுமே தெரிந்தாள்.....

குழலி இவனை பார்த்தும் அமைதியாய் திரும்பியவள்... மீண்டும் திரும்பி விஜயனை பார்த்து இது காட்சிப்பிழை அல்ல உண்மைதான் என்பதை உணர்ந்து பரிதவிப்புடன் எழுந்து நின்றாள்....

கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல.

Quote

சந்தித்து சில மணி நேரங்களே ஆயிருந்தாலும் ஏதோ யுகம் யுகமாக தன்னுடன் இருக்கின்றவளை பிரிவதுபோல் உணர்ந்தான் விஜயன்....குழலியின் நிலைமையோ இதற்கு எந்த விதத்திலும் குறைவில்லாதது... இது நாள் வரை துள்ளித் திரிந்து மற்றவர்களை பழித்தும் மகிழ்ந்திருந்தவள் அவள்...ஆனால் இப்பொழுதோ இவன் பிரிவை தடுக்க முடியாது இறைவனை தரிசித்து மன்றாடிட வந்திட்டாள் .

ஆண்டவனை தரிசிக்க வந்தவளுக்கு ஆண்டவனின் தரிசனம் முடிந்ததும் மனதை ஆண்ட... இல்லை... இல்லை... மனதை ஆளும் மன்னவனின் தரிசனமும் கிடைக்கும் என்பதை எதிர்பார்க்கவில்லை.

குழலியின் முகம் இப்படி சோபை இழந்துவிடும் என்று எவர் கூறியிருந்தாலும் நம்பியிருக்கமுடியாது... உள்ளத்தில் இருக்கும் பிரிவின் வேதனையை இவள் முகம் காட்டியதோ?

விஜயனை கண்டதும் உதடுகள் துடிக்க... கண் எனும் அணை நிரைந்து மடையை உடைத்து வெளிவர துடிக்கும் வெள்ளமாக நிற்க.... விஜயனின் முகம் வேதனையை வெளிக்காட்டவில்லை என்றாலும் தனது உயிரே எதிரே நிற்பதாக உணர்ந்தான்... அவளின்றி அவன் உயிரற்ற சவமே என்பதை அவன் மனது உணர்த்தியது...

உடைந்துவிட்டது... அவள் கண்ணீரை தடுத்து நின்ற அணை உடைந்தே விட்டது.... ஓடிவந்து தன் நெஞ்சின் மீது சாய்ந்த குழலியை எப்படி சமாதானப்படுத்துவது என்று விஜயனுக்கு தெரியிவில்லை... விஜயன் அவனை சமாதானப்படுத்திக்கொள்ளவே இயலாது நின்ற நிலையில் எங்கனம் குழலியினை சமாதானப்படுத்தபோகின்றான்... அவன் நெஞ்சை அவள் கண்ணீரினால் கரைக்க முயன்றாலா? குழலியின் கண்ணீர் தன் நெஞ்சை நனைப்பதை உணர்ந்த விஜயன் தன் கண்ணில் பெருகிய கண்ணீரை யாரும் அறியாவண்ணம் துடைத்துக்கொண்டான்...

குழலி.....

ம்.....

குழலி....

ம்......

எதற்கு இந்த சோகம்?

அவள் சற்றே அண்ணாந்து அவன் கண்களை பார்த்து... தாங்கள் அறியாததா?

இப்போது என்ன நடந்துவிட்டது என்று வருந்துகிறாய்?

இந்த பிரிவை தாங்குவதற்கு நான் உங்களைப்போல் ஆடவர் அல்லவே?

குழலி....

ம்...

குழலி... பிரிவெண்பதில் ஆண் பெண் என்ற பேதம் எதற்கு உண்மையான அன்பினால் பிணைக்கப்பட்ட இரு இதயங்கள் பிரிவென்றால் வருந்தவே செய்யும்.

என்னையும் உங்களுடன் அழைத்துச்செல்லுங்கள்....

உன்னை எப்படி அழைத்துச்செல்வது குழலி....

உடன்போக்கு என்பது தமிழ்ச் சமூகத்தின் இயல்புதானே...

குழலி.. நீ வரத் தயாராக இருக்கும் போது...எனக்கும் அழைத்துச்செல்ல ஆசைதான்... ஆனால் நான் இன்று இருக்கும் இந்த நிலையில் உன்னை மணக்க விரும்பவில்லை... எனக்கென்று ஒரு இடம்... ஒரு நாடு.. என் இதய சிம்மாசனத்தில் இருக்கும் உன்னை மணக்க தகுதியுள்ளவனாக்கி கொண்டு உன்னை மணக்கின்றேன்... காலம் உனக்கு தகுந்த பொறுமையை அளிக்கட்டும்..

குழலிக்கு அவன் நாட்டை பற்றி பேசும் போது அவன் உடல் சிலிர்த்ததையும் உடல் இரும்பென மாறியதையும் அவன் கண்களில் இருந்த கனவையும் அறிந்து அதை தன் காதல் கெடுத்துவிடக்கூடாது என்று எண்ணிக்கொண்டாள்...

Quote

காதலர்க்கும் மட்டும் காலம் இரு வேறுவகையாக நேரத்தை உழலச் செய்கிறதோ? காத்திருக்கும் போது மெதுவாகவும்..... உடன் இருக்கும் போது வேகமாகவும் காலம் ஓடுகிறது....

நேரம் கடந்ததையும்... குழலியையும் விஜயனையும் தேடி கண்டன் வருவதை கண்டுவிட்ட விஜயன் குழலியை செல்ல பணித்தான்...

கண்டன் வருவதற்குள் அவன் கண்ணில் இருந்து மறைந்தாள் குழலி

நேரமாகிறது விஜயா.... சரி குழலி எங்கே?

குழலியா... நான் பார்க்வில்லை என்றான் விஜயன்...

சரி நாம் போகலாமா என்ற கண்டனின் கேள்விக்கு விஜயன் பதில் ஒன்றும் பேசாமல் உடன் சென்றான்...

விஜயா...விஜயா...

சொல்....

உன் நெஞ்சில் ஒட்டியிருக்கும் செந்தூரத்தை துடைத்துக்கொள்... தந்தை கவனித்துவிடக்கூடும்...

அப்போதுதான் விஜயனும் கவனித்தான்... குழலி தன் நெஞ்சில் சாய்ந்த போது ஒட்டியிருந்த திலகத்தை துடைத்துவிட்டு... எதுவும் நடவாதது போல் சென்றான்... உண்மையில் கண்டனின் முகத்தை பார்க்க ஏற்பட்ட கூச்சமே காரணம் என்பதை விஜயன் மட்டுமே அறிவான்.

வீட்டின் வாசலிலேயே பழுவூரார் நின்றுகொண்டிருப்பார் என்று விஜயன் எதிர்பார்க்கவில்லை...

அவர்கள் கிளம்புவதற்கு தயாராக குதிரைகளும் மேலும் சிலரும் இருந்தனர்.

வாணியச்செட்டியின் காவலுக்கு கண்டன் தலைமையில் காவலுக்கு கிளம்புகிறீர்கள் என்பதை நினைவிற் கொள்ளுங்கள்... கள்வர்களிடம் இருந்து பொருளை காப்பது மட்டுமல்ல.... உங்களின் தினவெடுத்த தோள்கள் நாளை போர்களங்களுக்குச்செல்ல இதுவும் ஒரு பயிற்சியாக அமையலாம்...

தந்தையின் பேச்சு கண்டனுக்கு ஓர் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது... இதுவரை அரசியல் வேண்டாம் என்று இருந்தவர் இன்று போர் பற்றி பேசுகிறாரே?

விஜயா என்னுடன் வா என்று விஜயனை மட்டும் தனியே அழைத்து சென்றார்.

Quote






Maina saree or bahiya na sarwani pahna thaincent porn comicshijra in sareewatch desi xxxindian inchest storiessri lanka sex picssex pujaridesi indian sex kahaniyatagalog stories for adultsdesi sexy urdu storiesinsect sex comicssweet pussy exhibitionsexi story in urduurdu sexy stotydesi aunties hot in sareemaa beta indian sex storieslund fudiwww.tamil sex kathaigaltelugu hot sex storybollaywood sex nettamil hottest storiesaunty pics exbiiamazing indian xossipprostitutes nude picturessex stories in telugu formatgandu ki kahaniwww.sex.com maratisex story bhabhi kidesi school fuckrecent telugu sex kathalusexy desi aunty in sareefree download desi mms scandalkamasutra telugu sex storiessali storydesi choot storygoshti marathi chawatsex kathalushreya sex storiesfree desi sex websitesbanglakamwalisexmummy ki chaddierotic wife rape storiespranay katha in marathi languagechut aur landmalayam sex storydesiaunty picstelgu kathalummsscandel.comrani nudlund ki pyaslatest tamil sex kathaikalhairy armpit girls photosinternet cafe scandal videosnaked indian auntiesxxx paki videomarathi sambhog storyhindi sex story baap betipics of sexy auntieshairless pussy picturesaunty naveltamil aunty sex stories in tamilfavorite sex position pollxxx sexy storysurdu sexy stories with picturewww.bluefilm imageDidichavattagalog kantot storiesmost arousing sex storiesnamitha bootymiddle age boobssex photo thamilbig booba picsaunty hot picswww.sextory.commalayalamsexsdesi chutedesi couple webcamurdu sexy satoriessexy rape stories hindinaked mallu auntytarak mehta ka oolta chashma jethalal and babitadesi bangla choti collectionarmpits exbiineha bhabibest exbiiगाव की जवान औरत desibeesmallu pormlucy fire xxxdidi ki sex storyantervasna.ingandi sex kahaniadesi mallu clips